அருணாச்சல பிரதேச முதல்வராக பீமாகாண்டு பதவியேற்றார்.
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைக்கான தேர்தலும் நடைபெற்றது. 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதல்வராக பீமாகாண்டு இன்று பதவியேற்றுக்கொண்டார். டோர்ஜி காண்டு கருத்தரங்கு மையத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அம்மாநில ஆளுநர் பி.டி.மிஷ்ரா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.